செய்திகள்

பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்த 3 இயக்குநர்கள்: டிராகன் திரைப்பட அப்டேட்!

பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்த மிஷ்கின் - டிராகன் திரைப்பட அப்டேட்!

DIN

’டிராகன்’ திரைப்படத்தில் இயக்குநர்கள் மிஷ்கின் கௌதம் வாசுதேவ் மேனன், கே. எஸ். ரவிக்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த தகவலை டிராகன் திரைப்படக் குழு சற்று முன் வெளியிட்டுள்ளது.

இயக்குநராக மட்டுமல்லாது கதாநாயகனாகவும் முத்திரைப் பதித்துள்ள பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக அடுத்ததாக நடித்து வரும் ’டிராகன்’ திரைப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார். ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் டிராகன் திரைப்படத்தில் ‘மயில்வாகனன்’ என்ற கதாபாத்திரமேற்று நடிக்கிறார் மிஷ்கின்.

தமிழ் ரசிகர்களிடையே தனி இடத்தைப் பிடித்துள்ள அஷ்வத் மாரிமுத்து இயக்கி வரும் டிராகன் திரைப்படத்தில் மிஷ்கின் மட்டுமல்லாது இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், கே. எஸ். ரவிக்குமார் ஆகியோரும் கைகோர்த்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் ‘வாலே குமார்’ என்ற கதாபாத்திராத்திலும், கே. எஸ். ரவிக்குமார் ‘பரசுராம்’ என்ற கதாபாத்திராத்திலும் நடிக்கின்றனர்.

இதனை குறிப்பிட்டு மேற்கண்ட 3 இயக்குநர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். டிராகன் திரைப்படத்தின் மூலம் இளம் நாயகி ‘கயாது லோஹார்’ தமிழில் முதல்முறையாக கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழக்குரைஞா்கள் நீதித் துறையுடன் இணைக்கமாகச் செயல்பட வேண்டும்: உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: இருவருக்கு நிபந்தனை பிணை

பூட்டிய வீட்டில் தங்க நகைகள் திருட்டு

பெண் மா்ம மரணம்

வாகனத்தில் பைக் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT