முகப்பு
செய்திகள்

பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்த 3 இயக்குநர்கள்: டிராகன் திரைப்பட அப்டேட்!

பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்த மிஷ்கின் - டிராகன் திரைப்பட அப்டேட்!

செய்திகள்

பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்த 3 இயக்குநர்கள்: டிராகன் திரைப்பட அப்டேட்!

பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்த மிஷ்கின் - டிராகன் திரைப்பட அப்டேட்!

Updated On : 31 டிசம்பர், 2024 at 4:13 PM
பகிர்:

’டிராகன்’ திரைப்படத்தில் இயக்குநர்கள் மிஷ்கின் கௌதம் வாசுதேவ் மேனன், கே. எஸ். ரவிக்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த தகவலை டிராகன் திரைப்படக் குழு சற்று முன் வெளியிட்டுள்ளது.

இயக்குநராக மட்டுமல்லாது கதாநாயகனாகவும் முத்திரைப் பதித்துள்ள பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக அடுத்ததாக நடித்து வரும் ’டிராகன்’ திரைப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார். ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் டிராகன் திரைப்படத்தில் ‘மயில்வாகனன்’ என்ற கதாபாத்திரமேற்று நடிக்கிறார் மிஷ்கின்.

தமிழ் ரசிகர்களிடையே தனி இடத்தைப் பிடித்துள்ள அஷ்வத் மாரிமுத்து இயக்கி வரும் டிராகன் திரைப்படத்தில் மிஷ்கின் மட்டுமல்லாது இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், கே. எஸ். ரவிக்குமார் ஆகியோரும் கைகோர்த்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் ‘வாலே குமார்’ என்ற கதாபாத்திராத்திலும், கே. எஸ். ரவிக்குமார் ‘பரசுராம்’ என்ற கதாபாத்திராத்திலும் நடிக்கின்றனர்.

இதனை குறிப்பிட்டு மேற்கண்ட 3 இயக்குநர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். டிராகன் திரைப்படத்தின் மூலம் இளம் நாயகி ‘கயாது லோஹார்’ தமிழில் முதல்முறையாக கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →