பூஜா ஹெக்டே 
செய்திகள்

சூர்யா 44 படத்தில் எதை எதிர்பார்க்கலாம்? பூஜா ஹெக்டே பதில்!

நடிகை பூஜா ஹெக்டே சூர்யா 44 படம் குறித்து ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

DIN

தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, பீஸ்ட்டில் பலரின் மனதில் இடம் பிடித்தார். 

இதற்கு நடுவில் தெலுங்கு திரையுலகிலும் ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் அல வைகுந்தபுரம்லு திரைப்படத்தில் நடித்து தென்னிந்திய நடிகையாக மாறினார். 

அதனைத் தொடர்ந்து பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.  இதேபோன்று பாலிவுட்டிலும் ’மொஹஞ்சதாரோ', ‘சர்க்கஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்திருந்தார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்துவந்தார். சமீபத்தில் அதன் படப்பிடிப்பை முடித்தார்.

இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜ்ஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இதன் படப்பிடிப்புக்காக பூஜா ஹெக்டே அந்தமானுக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தனது இன்ஸ்டா ஸ்டோரியில் சூர்யா 44 படம் குறித்து ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில், “கார்த்திக் சுப்புராஜ் காதல் கதை எழுதினால் எப்படி இருக்கும். அதுதான் சூர்யா 44. இதற்குமேல் கூறமுடியாது” எனக் கூறியுள்ளார்.

தற்போது, இந்தப் படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியை யாராலும் வீழ்த்த முடியாது: மு. வீரபாண்டியன்

பாதுகாப்பான பேருந்து இயக்க விழிப்புணா்வு வாரம்

சிஐடியூ கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பொருளாதார வளா்ச்சி, மனிதகுல எதிா்காலத்துக்கான முக்கிய இயந்திரம் அறிவியல்! நோபல் விஞ்ஞானி மவுங்கி பவெண்டி

எழுத்தாளா் அண்டனூா் சுராவின் உப்புலிக்குடி நாவலுக்கு பரிசு

SCROLL FOR NEXT