முகப்பு
செய்திகள்

பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டேன்: காவ்யா தாபர்

நடிகை காவ்யா தாபர் தான் எதிர்கொண்ட பாலியல் சீண்டலைப் பகிர்ந்துள்ளார்.

Updated On : 17 நவம்பர், 2024 at 10:56 AM
காவ்யா தாபர்
பகிர்:

நடிகை காவ்யா தாபர் தனக்கு நிகழ்ந்த பாலியல் அத்துமீறலைக் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்துவருபவர் காவ்யா தாபர். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே விளம்பர மாடலாகவும் நடித்து வந்தார். தமிழில் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ், பிச்சைக்காரன் - 2 படங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய காவ்யா தாபர், “என் அப்பாவின் ஆசைக்காகவே சினிமாவிற்கு நடிக்க வந்தேன். சினிமாவில் முயன்றுகொண்டிருந்த காலத்தில் விளம்பர மாடலாக இருந்தேன். அப்போது, இயக்குநர் ஒருவர் அவருடைய அலுவலகத்திற்கு ஆடிஷனுக்காக அழைத்திருந்தார். அங்கு சென்றதும், என்னிடம் பாலியல் ரீதியான சலுகைகளை எதிர்பார்த்தார்.

காவ்யா தாபர்

ஆசைக்கு ஒத்துழைத்தால் 4 பட வாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகவும் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நான் அதை மறுத்துவிட்டேன்.” என தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →