FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிக் பாஸ் 8: இந்த வார 'நாமினேஷன்' பட்டியல்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வார நாமினேஷன் பட்டியல் வெளியாகியுள்ளது.

Updated On : 21 அக்டோபர் 2024, 3:55 pm IST
பிக் பாஸ் பெண்கள் அணியினர் - படம் | எக்ஸ்
பகிர்:

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வார நாமினேஷன் பட்டியல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரத்தின் தொடக்கத்திலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கத் தகுதியற்ற நபர் யார்? என்பது குறித்து தேர்வு செய்யப்படும். இதில் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் தலா இரு நபர்களைத் தேர்வு செய்து நாமினேஷன் செய்யலாம்.

அதிக நபர்களால் தேர்வு செய்யப்பட்ட நபர், நாமினேஷன் பட்டியலில் இடம்பெறுவர்.

Advertisement

Advertisement

அந்தவகையில் இந்த வாரத்தின் முதல் நாளான இன்று (அக். 21) பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் தாங்கள் வெளியேற்ற விரும்பும் இரு நபர்களை தக்க காரணங்களுடன் கூறினர்.

இதில், அதிக போட்டியாளர்களால் தேர்வு செய்யப்பட்டு, நாமினேஷன் பட்டியலில் 8 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அதன்படி, முதலில் ஜாக்குலின் தேர்வு செய்யப்பட்டார். இவர் கடந்த இரு வாரங்களாக நாமினேஷன் பட்டியல் இடம்பெற்றார். இதனைத் தொடர்ந்து அன்ஷிதா, பவித்ரா ஜனனி, செளந்தர்யா, தர்ஷா குப்தா, ஆகியோர் நாமினேஷனில் இடம்பெற்றனர்.

இதேபோன்று ஆண்கள் அணியில் சத்யா, முத்துக்குமரன், அருண் ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றனர்.

இவர்களுக்கு இந்த வாரம் முழுக்க ரசிகர்கள் வாக்களிக்கலாம். அதிக வாக்குகள் பெறும் நபர் வீட்டிற்குள் இருக்க அனுமதிக்கப்படுவர்.

மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்றவர், பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கத் தகுதியற்றவர் என்பது உறுதி செய்யப்பட்டு இந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவார்.

இதற்கு முந்தைய இரு வாரங்களில் குறைந்த வாக்குகளைப் பெற்று ரவீந்தரும், அர்ணவும் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments