கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி!
ஜெயம் ரவி - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் திரைப்படம் உருவாகவுள்ளதாகத் தகவல்.
நடிகர் ஜெயம் ரவியின் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் - நடிகர் சூர்யா கூட்டணியில் சூர்யா 44 திரைப்படம் வேகமாக உருவாகி வருகிறது.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமான், ஊட்டியில் முடிவடைந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொச்சியில் துவங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் நடிகர் ஜெயம் ரவியை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி, ‘பிரதர்’, ‘காதலிக்க நேரமில்லை’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். ஜீனி படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, தன் மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்தது அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.