செய்திகள்

குட் பேட் அக்லி - திரைகள், காட்சிகள் அதிகரிப்பு!

குட் பேட் அக்லி குறித்து...

DIN

குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு கூடுதல் திரைகளும் காட்சிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு இப்படம் மிகுந்த திருப்தியளித்துள்ளதால் பலரும் ம்றுமுறையும் திரையரங்கில் இப்படத்தைப் பார்த்து வருகின்றனர்.

முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 30 கோடியை வசூலித்தது. மேலும் பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி நகர்வதால் இந்த வார இறுதிக்குள் ரூ. 100 கோடியை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை உள்பட பல நகரங்களில் படத்திற்குக் கூடுதல் திரைகள் மற்றும் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரவு நேரக் காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்லாக இருப்பதால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் மிக லாபகரமான படமாக குட் பேட் அக்லி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்பிரிட் படத்தில் பிரபாஸுடன் இணையும் பிரபல தென்கொரிய நடிகர்!

தி ஃபேமிலி மேன் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

தெலங்கானா அமைச்சராகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன்!

முதல் அரையிறுதி: சதம் விளாசிய தென்னாப்பிரிக்க கேப்டன்; இங்கிலாந்துக்கு 320 ரன்கள் இலக்கு!

சத்தீஸ்கரில் 51 மாவோயிஸ்டுகள் சரண்!

SCROLL FOR NEXT