FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

பாக்கியலட்சுமி தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை சுசித்ராவின் புதிய தொடர் குறித்து.

Updated On : 4 ஆகஸ்ட் 2025, 4:35 pm IST
சிசித்ரா - இன்ஸ்டாகிராம்
பகிர்:

பாக்கியலட்சுமி தொடரில் நடித்துப் புகழ் பெற்ற நடிகை சுசித்ரா, தற்போது புதிய தொடரில் நடிக்கவுள்ளார். இந்தத் தொடர், அவரின் தாய்மொழியான கன்னடத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

வங்க மொழியில் உருவான ஸ்ரீமோயி என்ற தொடரைத் தழுவி எடுக்கப்பட்ட பாக்கியலட்சுமி தொடர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விஜய் தொலைக்காட்சியில் 2020 ஜீலை முதல் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இத்தொடரின் படப்பிடிப்பு தளத்தில் இறுதி எபிஸோட் காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. படப்பிடிப்பு தளத்தில் பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாளை குழுவினர் கேக் வெட்டி நெகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

Advertisement

Advertisement

இறுதிநாள் படப்பிடிப்பில்... - இன்ஸ்டாகிராம்

இதனிடையே இத்தொடரில் பாக்கியலட்சுமியாக நடித்த நடிகை சிசித்ரா, புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் தொடர் அவரின் தாய் மொழியான கன்னடத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

இதனை சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுடன் அவர் பகிர்ந்துள்ளார். அதில், ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி தொடர், 5 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் என்ற பெருமையப் பெற்றிருந்தாலும், கலவையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

எனினும், இந்தத் தொடரில் பாக்கியலட்சுமியாக நடித்த சுசித்ராவின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. இதனால், கன்னடத்தில் இவர் நடிக்கும் புதிய தொடருக்கு தமிழில் இருந்து ஏராளமான ரசிகர்கள் இருப்பார்கள் என பலர் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

summary

Actress Suchitra, who became famous for her role in the serial Bhagyalakshmi, will now star in a new serial.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments