முகப்பு
செய்திகள்

விருது வாங்கியவருடன்.. தடபுடல் விருந்துடன் இட்லி கடை!

நடிகர் தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை படத்தில் நடிகர் பார்த்திபனும் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

Updated On : 16 ஆகஸ்ட் 2025, 11:39 am IST
நடிகர்கள் பார்த்திபன் மற்றும் தனுஷ் - X | Radhakrishnan Parthiban
பகிர்:

நடிகர் தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை படத்தில் நடிகர் பார்த்திபனும் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில்,

இன்னொரு தேசிய விருது வாங்கி இருக்க வேண்டிய ‘ஆடுகளத்தில் நான் நடிக்க முடியாமல் போனதும், இணைந்து நடித்த ‘ சூதாடி’ இடையில் நின்று போனதும், இவையாவையும் ஈடு கட்டும் விதமாக ‘ இட்லி கடை’யில் ஒரு சிறு மினி இட்லியாக கௌரவ வேடத்தில் நடிக்க அவரே அழைத்த போது, மறுக்காமல் ஒப்புக் கொண்டேன். நேற்று டப்பிங் நிறைவு பெற்றது.

Advertisement

Advertisement

இரும்பினும் சக்தி கொண்ட இதயத்தோடு, எறும்பினும் சுறுசுறு உழைப்போடு, சகலகலா வல்லவனாக, அகில இந்திய நட்சத்திரமாக தனுஷ் மிளிரினால் (மிருனாள் எனத் தவறாக வாசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஏனெனில் அது தான் பிசுபிசுத்த கிசுகிசுவாய் போய் விட்டதே)அது ஆச்சர்யமில்லை என்பதை கண் கூடாகக் கண்டேன் இட்லி கடையில் . அக்டோபரில் வெந்து விடும் sorry வந்து விடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ் இயக்கிய பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்களைத் தொடர்ந்து இட்லி கடை என்ற படத்தையும் தற்போது இயக்கி வருகிறார். தானே இயக்கி நடிக்கும் தனுஷின் இட்லி கடை படத்தில் ராஜ்கிரண், நித்யா மெனன், அருண் விஜய் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments