தனுஷுடன் இணையும் ருக்மிணி வசந்த்?
தனுஷ் நடிக்கும் அடுத்தப் படத்தில் நடிகை ருக்மிணி வசந்த் இணைவது பற்றி...
தனுஷ் நடிப்பில் உருவாகும் அடுத்தப் படத்தில் நாயகியாக ருக்மிணி வசந்த் நடிக்கவுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிக்கும் 55-வது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். தனுஷின் சொந்தத் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைகிறது. சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்தப் படத்திற்கு இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, தனது அடுத்தப் படத்தில் லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுடன் தனுஷ் இணைவதாகக் கூறப்பட்ட நிலையில் இந்தப் படத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
இதில், நாயகியாக ருக்மிணி வசந்த்-ஐ நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு முதலில் அனிருத் இசையமைப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது சாய் அபயங்கர் அல்லது ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.