மோகன். ஜி படத்திற்கு ஏன் பாடினீர்கள்? வருத்தம் தெரிவித்த சின்மயி!
பாடகி சின்மயி திரௌபதி - 2 திரைப்படம் குறித்து பதிவிட்டுள்ளார்...
பாடகி சின்மயி திரௌபதி - 2 திரைப்படத்தில் பாடியதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மோகன். ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி - 2 திரைப்படத்தின் வெளியீட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் முதல் பாடலான எம்கோனே பாடலைச் சின்மயி பாடியிருந்தார்.
இதன் புரோமோ வெளியானதும் ரசிகர்கள், “பெண் சுதந்திரம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தட்டிக்கேட்கும் சின்மயி, பெண்களின் சுதந்திரத்திற்கு எதிரான சுயசாதி திரைப்படங்களை எடுக்கும் இயக்குநர் மோகன். ஜி திரைப்படத்திற்கு ஏன் பாடினார்? எனக் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சின்மயி பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எம்கோனே குறித்து எனது மனமார்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறேன். இசையமைப்பாளர் ஜிப்ரானை எனக்கு 18 ஆண்டுகளாகத் தெரியும். அவர் அழைத்து இப்பாடலைப் பாடக்கேட்டதால் எப்போதும் போல் சென்று பாடினேன். அப்போது, அவரும் அங்கு இல்லை என நினைக்கிறேன். எப்படிப் பாட வேண்டும் என்கிற குறிப்பு இருந்ததால் அதை பாடி முடித்ததும் கிளம்பினேன்.
இந்தப் பாடலைச் சுற்றியுள்ள விஷயங்களை நான் இப்போது தான் அறிந்துகொள்கிறேன். முன்பே இதை அறிந்திருந்தால், என் கொள்கைகளுக்கு முரண்பட்டவை என்பதால் நான் ஒருபோதும் இதில் இணைந்திருக்க மாட்டேன். இதுதான் முழு உண்மை” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: சண்முக பாண்டியனின் கொம்புசீவி வெளியீடு அறிவிப்பு!
chinmayi apologies for draupati - 2 song
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.