டியூட் திரைப்படத்தில் இடம்பெற்ற தன் பாடல்களுக்கு இளையராஜா அனுமதியளித்துள்ளார்.
திரைப்படங்களில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ள தனது பாடல்களை நீக்கக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகிறார்.
அண்மையில், 'டியூட்' படத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த 'கருத்த மச்சான்' மற்றும் 'நூறு வருஷம்' பாடல்களைப் பயன்படுத்திருந்தனர். ஆனால், இளையராஜாவிடம் அதற்கான அனுமதியைப் பெறவில்லை.
இதனால், இளையராஜா தரப்பிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, டியூட் திரைப்படத்தில் இளைராஜா பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தது.
இந்த நிலையில், ஓடிடி வெளியீட்டிலும் இதன் தாக்கம் இருக்கும் என்பதால் டியூட் தயாரிப்பு நிறுவனம் இளையராஜாவுக்கு ரூ. 50 லட்சம் வழங்கி, வழக்கை சமரசமாக்கிக் கொண்டனர். தொடர்ந்து, இளையராஜாவும் தன் பாடல்களைப் பயன்படுத்த அனுமதியும் வழங்கியுள்ளார்.
முன்னதாக, டியூட் திரைப்படத்தை தயாரித்த மைத்ரி நிறுவனம் அஜித்தின் குட் பேட் அக்லியையும் தயாரித்திருந்தது. அப்படத்திலும், இளையராஜாவின் பாடல்களுக்கு அனுமதி வாங்காமல் பயன்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.