சென்னையில் இளையராஜா சிம்பொனி இசை!
சென்னையில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்யும் இளையராஜா...
இளையராஜா லண்டனில் அரங்கேற்றிய சிம்பொனி இசையை சென்னையில் நிகழ்த்துவதாக அறிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா வேலியண்ட் எனப் பெயரிட்ட தன் சிம்பொனி இசையை லண்டனில் கடந்தாண்டு மார்ச் மாதம் அரங்கேற்றம் செய்தார். சிம்பொனி இசைக்கென பிரபலமான ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா குழு இளையராஜாவின் இசைக்குறிப்புகளை வாசித்து அசத்தினர்.
இதனால், சிம்பொனியை எழுதி அதனை சர்வதேச அளவில் அரங்கேற்றிய ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருமையை இளையராஜா பெற்றார்.
Advertisement
இந்த நிலையில், பொது ரசிகர்கள் கேட்பதற்காக சிம்பொனி இசையை இளையராஜா சென்னையில் வருகிற மே 30 ஆம் தேதி அரங்கேற்றம் செய்வதாக அறிவித்துள்ளார்.
இது இசை ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் இளையராஜாவின் சிம்பொனியைக் கேட்க மிகுந்த ஆவலுடன் இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.