முகப்பு
செய்திகள்

பிக் பாஸ் 9: திடீர் ட்விஸ்ட்! இந்த வாரம் இருவர் வெளியேற்றம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இருவர் வெளியேற்றம்.

Updated On : 21 டிசம்பர், 2025 at 4:52 AM
விஜய் சேதுபதி.
பகிர்:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேறியுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 11 வது வாரத்தை எட்டியுள்ளது. விஜய் சேதுபதி போட்டியாளர்களை செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி, ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் விதிகளை மீறும் வகையில் ஒலிவாங்கியை அகற்றிவிட்டு பார்வதி, கமருதீன் ரகசியம் பேசியதால், அனைவருக்குமான அடிப்படை உணவுப் பொருள்கள் இந்த வாரம் பறிக்கப்பட்டது.

அதற்காக, நேற்று(டிச. 13) நடந்த நிகழ்ச்சியில், ஒலிவாங்கியை நீங்கள் போட வேண்டாம் என்று இருவரையும் விஜய் சேதுபதி கண்டித்தார். அதன்படி நேற்றைய நிகழ்ச்சியில் பார்வதி, கமருதீன் ஒலி வாங்கியை போடாமல் பேசினர்.

இருவரும் மன்னிப்புக் கேட்ட நிலையில், நிகழ்ச்சி நிறைவடையும்போது இருவரையும் ஒலிவாங்கி போடச்சொல்லி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் விஜய் சேதுபதி.

ஒவ்வொரு வாரமும் மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்றவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார். அதன்படி நேற்றைய நிகழ்ச்சியில் ரம்யா ஜோ வெளியேறினார்.

இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் வியானா வெளியேறவுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்றிரவு(டிச. 7) வெளியாகும் எபிசோடில் தெரியவரும்.

இந்த வாரம் ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரம் இருவர் வெளியேறியுள்ளனர்.

கடந்த வாரங்களில் நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, திருநங்கை அப்சரா, கலையரசன், பிரவீன், துஷார், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், கெமி ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

summary

Two contestants have been eliminated from the Bigg Boss show this week.

முழு கட்டுரையைப் படிக்க →