முகப்பு
செய்திகள்

மீண்டும் இயக்கி, நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்!

பிரதீப் ரங்கநாதனின் புதிய திரைப்படம் குறித்து...

Updated On : 16 டிசம்பர், 2025 at 7:20 AM
பிரதீப் ரங்கநாதன்
பகிர்:

நடிகர் பிரதீப் ரங்கநாதன் புதிய திரைப்படத்தை இயக்கி, நடிக்கவுள்ளார்.

நடிகர் ரவி மோகனின் ‘கோமாளி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இதையடுத்து, ‘லவ் டுடே’ திரைப்படம் மூலம் நாயகனாகவும் அறிமுகமானார்.

இவரது நடிப்பில் வெளியான ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மற்றும் ‘டியூட்’ ஆகிய திரைப்படங்கள் தொடர்ந்து ரு.100 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றி பெற்றுள்ளன. அடுத்ததாக இவர் நடித்த எல்ஐகே திரைப்படம் 2026, பிப்ரவரி வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குவதுடன் அதில் நாயகனாகவும் பிரதீப் நடிக்கவுள்ளார்.

லவ் டுடே திரைப்படத்திற்குப் பின் பிரதீப் இயக்கவுள்ள திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

summary

pradeep ranganathan plans to direct and act a new film under ags productions

முழு கட்டுரையைப் படிக்க →