இயக்குநர் ராம் கோபால் வர்மா, ரன்வீர் சிங் 
செய்திகள்

தென்னிந்திய சினிமாவை எட்டி உதைத்து... சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!

துரந்தர் திரைப்படம் குறித்து ராம் கோபால் வர்மா...

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

துரந்தர் திரைப்படம் ஹிந்தியிலேயே ரூ. 1000 கோடியை வசூலித்து பாலிவுட்டையே மிரட்டி வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் பாகங்களும் சேர்த்து ரூ. 250 கோடியில் உருவானது. முதல் பாகமே மிகப்பெரிய லாபமாக அமைந்ததால் அடுத்தாண்டு மார்ச் மாதம் திரைக்கு வரும் துரந்தர் - 2 படத்திற்கு பலரும் காத்திருக்கின்றனர்.

ரசிகர்கள் மட்டுமல்லாது பல மொழி இயக்குநர்களும் இப்படத்தைப் பாராட்டியுள்ளனர்.

இந்த நிலையில், இயக்குநர் ராம் கோபால் வர்மா, “பாலிவுட் மீதான தென்னிந்திய சினிமாவின் படையெடுப்பை துரந்தர் என்கிற திரைப்படம் தனது இடது காலால் எட்டி உதைத்துள்ளது. வலது கால் துரந்தர் இரண்டாம் பாகத்திற்காகத் தயாராகியுள்ளது. முதல் பாகம் அவர்களை அச்சுறுத்தியிருந்தால், இரண்டாம் பாகம் மிரட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவை ராம் கோபால் வர்மா தாக்கியதால் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

ram gopal varma criticized south indian movies through dhurandhar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு ஜூலை 4, 5-இல் டெட் தோ்வு: ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிப்பு

தோ்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் பிளக்ஸ் பேனா் வைத்து ஆா்ப்பாட்டம்

சிதம்பரத்தில் தொடங்கியது நாட்டியாஞ்சலி விழா! மாணவிகள் பரதம் ஆடி பரவசம்!

‘பாலஸ்தீன ஆக்ஷன்’ அமைப்புக்குத் தடை செல்லாது: பிரிட்டன் நீதிமன்றம்

அத்திகடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்கள்: தமிழக அரசைக் கண்டித்து பிப்.25-இல் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT