முகப்பு
செய்திகள்

‘நம்பவே முடியவில்லை தங்கச்சி...’ வருத்தத்தைப் பகிர்ந்த வெங்கட் பிரபு!

பாடகி பவதாரிணியின் பிறந்த நாள் இன்று...

Updated On : 12 பிப்ரவரி, 2025 at 1:52 PM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2025 at 1:36 PM

மறைந்த பாடகி பவதாரிணியின் பிறந்த நாளில் வெங்கட் பிரபு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி புற்றுநோயால் கடந்த ஆண்டு ஜன. 25 ஆம் தேதி இலங்கையில் காலமானார். மறைந்து ஓராண்டு கடந்த முதல் பிறந்த நாள் இன்று என்பதால் பவதாரிணியுடனான நினைவுகளைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், இன்று இசையமைப்பாளர் இளையராஜா, இசைக்கலைஞர்களை நேரில் அழைத்து பவதாரிணிக்கான நினைவு நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்.

Advertisement

Updated On : 12 பிப்ரவரி, 2025 at 1:48 PM

இந்த நிலையில், இயக்குநரும் பவதாரிணியின் சகோதரருமான வெங்கட் பிரபு பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், பவதாரிணியுடான தன் புகைப்படத்தை இணைத்து, “ஓராண்டு முடிந்ததை நம்பவே முடியவில்லை. பிறந்த நாள் வாழ்த்துகள் தங்கச்சி” என தன் வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.