பாடலாசிரியர் பா. விஜய் கோப்புப்படம்
செய்திகள்

பாடலாசிரியர் பா. விஜய் மீது பண மோசடி புகார்!

பா. விஜய் மீது கொடுக்கப்பட்டுள்ள பண மோசடி புகார் தொடர்பாக...

DIN

பாடலாசிரியர் பா. விஜய் மீது பண மோசடி புகாரொன்று அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியில் வசிப்பவர் அருள்தாஸ், அவரது மனைவி லலிதா. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் சினிமா மற்றும் சின்ன திரை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.

இதனிடையே, அருள்தாஸ் - லலிதா தம்பதி ஒரு புதிய திரைப்பட பாடல் இயற்றுவதற்காக பாடலாசிரியர் பா.விஜய்யை அனுகி முன் தொகையாக ரூ.50,000 கொடுத்துள்ளனர்.

பாடலாசிரியர் பா.விஜய் பாடல் வரிகள் எழுதுவதாக கூறி ரொக்கப் பணத்தை பெற்றுள்ளார்.

ஆனால், பாடல் எழுதாததால் கொடுத்த முன் தொகையை திருப்பி தருமாறு அருள்தாஸ் - லலிதா தம்பதியினர் கேட்டதாகவும் பணத்தைத் திருப்பி தர முடியாது என பா. விஜய் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அருள்தாஸ் - லலிதா தம்பதியின கடந்த 30-தேதி கொடுங்கையூர் பி-6 காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

இந்த புகாரில் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் ஒரு தலைபட்சமாக பா.விஜய்க்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட அருள்தாஸ் - லலிதா தம்பதியரை காவல் நிலையத்திற்கு அழைத்து காவல் ஆய்வாளர் சரவணன் என்பவர் பொய்வழக்கு போட்டு விடுவேன் என மிரட்டியதாகவும் லலிதா குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: மன்னிப்பு கேட்பதில் என்ன சிக்கல்? கமலுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT