ஆத்தி அடி ஆத்தி... வீர தீர சூரன் 2-வது பாடல் வெளியீடு!
வீர தீர சூரன் படத்தின் 2-வது பாடல் வெளியீடு.
விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியாகியுள்ளது.
சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படம் வீர தீர சூரன். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தங்கலான் வெற்றிக்குப் பின்னர் வெளியாகும் விக்ரமின் படம் என்பதால் வீர தீர சூரன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
ஏற்கனவே, இப்படத்தின் முதல் பாடலான ’கல்லூரும் காத்து’ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க | காதலரைப் பிரிந்த நடிகை தமன்னா !
இந்த நிலையில், இரண்டாவது பாடலான, ‘ஆத்தி அடி ஆத்தி’ பாடல் இன்று வெளியாகியுள்ளது. விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை ஜி.வி.பிரகாஷ், சாதிகா பாடியுள்ளனர்.
இப்படத்தை மார்ச் 27 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.