முகப்பு
செய்திகள்

'குக் வித் கோமாளி' கேமிக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு!

குக் வித் கோமாளியில் புகழ் பெற்ற நடிகை கேமிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

Updated On : 11 மார்ச் 2025, 4:59 pm IST
கேமி என்னும் வைஷாலி கேமாகர் - இன்ஸ்டாகிராம்
பகிர்:

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் புகழ் பெற்ற நடிகை வைஷாலி கேமாகர் எனப்படும் கேமிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ஆபிஸ் என்ற இணையத் தொடரில் நடித்து கவனம் பெற்றுள்ளார். அதோடு மட்டுமின்றி ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் நடன நிகழ்ச்சியிலும் போட்டியாளராகப் பங்கேற்கவுள்ளார்.

வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கியவர் நடிகை கேமி. பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு மக்கள் மனங்களைக் கவர்ந்தார்.

Advertisement

Advertisement

கேமியின் வசீகரமான தோற்றமும், நகைச்சுவை உணர்வும் ஏராளமான ரசிகர்களை அவருக்குப் பெற்றுத்தந்தது. இதனை சரியான விதத்தில் பயன்படுத்துக்கொண்ட கேமி, தனது அடுத்தடுத்த வாய்ப்புகளில் கடினமாக உழைத்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

இதன் விளைவாக ஆபிஸ் என்ற இணையத் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கேமிக்கு கிடைத்தது. இதிலும் சிறப்பாக நடித்ததால் பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.

கேமி - இன்ஸ்டாகிராம்

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரமாண்ட நடன நிகழ்ச்சியில் கேமி போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார். இவருக்கு ஜோடியாக அருண் நடனமாடுகிறார்.

அருண் / கேமி - இன்ஸ்டாகிராம்

இந்த நிகழ்ச்சியில் நடிகை சினேகா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் நடன இயக்குநர் பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் நடுவர்களாகப் பங்கேற்றுள்ளனர்.

இந்த நடன நிகழ்ச்சியில் கேமியின் நடன திறமையையும் காண ரசிகர்கள் ஆவலுடம் எதிர்நோக்கியுள்ளனர்.

இதையும் படிக்க | கார்த்திகை தீபம் தொடரில் இணையும் சண்டக்கோழி நடிகர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments