FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நடிகை ஆர்த்திகாவின் புதிய தொடர் ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!

கார்த்திகை தீபம் தொடரின் மூலம் பிரபலமடைந்த நடிகை ஆர்த்திகாவின் புதிய தொடர் ஒளிபரப்பாகும் நேரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 21 மே 2025, 3:35 pm IST
வினோதினி தொடரில் ஆர்த்திகா - இன்ஸ்டாகிராம்
பகிர்:

கார்த்திகை தீபம் தொடரின் மூலம் பிரபலமடைந்த நடிகை ஆர்த்திகாவின் புதிய தொடர் ஒளிபரப்பாகும் நேரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கார்த்திகை தீபம் தொடரில் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்த ஆர்த்திகா, சிறிய இடைவேளைக்குப் பிறகு இத்தொடரில் நாயகியாக நடிக்கிறார். இதற்கு முன்பு பிளாக் & ஒயிட் என்ற இணையத் தொடரில் கார்த்திக் உடன் சேர்ந்து நடித்திருந்தார்.

இந்தத் தொடரின் வினோதினி என்ற பெயரிலேயே நடிப்பதாகவும், வாழ்வில் போராடி வெற்றி பெறும் பெண்ணின் பாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

சமூகத்தில் பெண்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் காரணிகளை எதிர்கொண்டு பொருளாதார சுதந்திரம் பெற எவ்வாறு போராடுகிறாள் வினோதினி என்ற அடிப்படையில் இத்தொடரின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

வினோதினி தொடரில் ஆர்த்திகா - இன்ஸ்டாகிராம்

இத்தொடரில் ஆர்த்திகாவுக்கு ஜோடியாக நடிகர் கிருஷ்ணா நடிக்கவுள்ளார். இவர் தெய்வமகள், சுந்தரி உள்ளிட்டத் தொடர்களில் நாயகனாக நடித்து கவனம் பெற்றவர்.

இதனிடையே வினோதினி 2வது தொடரின் முன்னோட்டக் காட்சியை சன் தொலைக்காட்சி வெளியிட்டது. இதில், இத்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ஜீ தமிழ் தொடரில் நாயகனாகும் சன் டிவி நடிகர்!

வினோதினி தொடரில் ஆர்த்திகா - இன்ஸ்டாகிராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments