மகிழ்ச்சி செய்தியைப் பகிர்ந்த சுந்தரி தொடர் நடிகை!
கருவுற்று இருப்பதை தெரிவித்த சுந்தரி தொடர் பிரபலம் ஸ்ரீகோபிகா.
சுந்தரி தொடரில் நடித்து பிரபலமடைந்த நடிகை ஸ்ரீகோபிகா தான் கருவுற்று இருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு வளைக்காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீகோபிகா.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அன்பே வா தொடரில் டெல்டா டேவிஸ் விலகிய பிறகு, கண்மணி பாத்திரத்தில் ஸ்ரீகோபிகா நாயகியாக நடித்திருந்தார்.
Advertisement
Advertisement
இவருக்கு வருண் தேவ் என்பவருடன் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி குருவாயூரில் உற்றார் உறவினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
இதனிடையே, நடிகை ஸ்ரீகோபிகா தான் கருவுற்று இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் பகிர்ந்து இருந்தார்.
இந்த நிலையில் வருண் தேவ் - ஸ்ரீகோபிகா தம்பதியினருக்கு வளைக்காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வளைக்காப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை ஸ்ரீகோபிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சின்ன திரை பிரபலங்கள் மற்றும் அவருடைய ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.