செய்திகள்

படை தலைவன் வெளியீட்டுத் தேதி மாற்றம்!

படை தலைவன் நாளை (மே. 23) வெளியாகாது என அறிவித்துள்ளனர்...

DIN

சண்முக பாண்டியன் நடிப்பில் உருவான படை தலைவன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்காந்த்தின் மகன் சண்முக பாண்டியன் படை தலைவன் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஜகநாதன் பரமசிவம் தயாரித்துள்ள இந்தப் படத்தை யு. அன்பு எழுதி இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.

இதில் கஸ்தூரி ராஜா, யாமினி சுந்தர், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யானைக்கும் மனிதனுக்கும் இடையேயான பாசப் போராட்டமாக இப்படம் உருவாகியுள்ளது.

அதிரடி ஆக்சன் நிறைந்த காட்சிகளால் நிறைந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் கவனம் பெற்றது. இந்த நிலையில், இப்படம் மே 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், போதிய திரைகள் கிடைக்காததால் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்திவைப்பதாகவும் விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடிப்படை வசதி கோரி திமுக எம்எல்ஏவை பொதுமக்கள் முற்றுகை

கஞ்சா விற்றதாக ஆட்டோ ஓட்டுநா் கைது

தனியாா் பேருந்துகளுக்கு அபராதம்

பாலியல் புகாரில் இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

SCROLL FOR NEXT