காந்தாராவைப் பணத்துக்காக உருவாக்கவில்லை: ரிஷப் ஷெட்டி
காந்தாரா குறித்து ரிஷப் ஷெட்டி...
நடிகர் ரிஷப் ஷெட்டி காந்தாரா டிரைப்படத்தைப் பணத்துக்காக மட்டும் உருவாக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி காந்தாரா திரைப்படம் மூலம் இந்தியளவில் புகழடைந்துள்ளார். வணிக ரீதியாகவும் இவருக்கு நல்ல மார்க்கெட் அமைந்துள்ளதால் இனி பான் இந்திய படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ரிஷப் ஷெட்டி, “காந்தாரா சாப்டர் - 1 திரைப்படத்தைப் பணத்திற்காக மட்டும் எடுத்துவிட முடியாது. நான் வேறு கதையைப் படமாகியிருந்தால் இவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்க மாட்டேன். காந்தாராவை மக்கள் கலாசாரா வேறுபாடுகளைக் கடந்து அதிகம் பேசியபோது இதை நியாயத்துடன் முடிக்க வேண்டும் என நினைத்தேன்.
Advertisement
Advertisement
காந்தாராவின் முன்கதையைச் சொல்வதன் மூலம் அதற்கு நியாயம் சேர்க்க முடியும் என நம்பினேன். தெய்வீகத்தின் தலையீட்டால் காந்தாரா சாப்டர் - 1 படத்தை எடுத்தேன். ” எனத் தெரிவித்துள்ளார்.
காந்தாரா சாப்டர் - 1 திரைப்படம் இதுவரை ரூ. 850 கோடி வரை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆட்டோகிராஃப் மறுவெளியீட்டுத் தேதி!
rishab shetty about kantara chapter - 1 movie
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.