துல்கர் சல்மான் 
செய்திகள்

காந்தா வாழ்வில் ஒருமுறை மட்டுமே அமையும் சினிமா: துல்கர் சல்மான்

காந்தா குறித்து துல்கர் சல்மான்...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் துல்கர் சல்மான் காந்தா திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் “காந்தா”. இந்தப் படம், மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் திரைப்படம், வரும் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.

டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் பேசிய துல்கர் சல்மான், “காந்தா திரைப்படம் iஇதனுடன் தொடர்புடைய அனைவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே அமையும் சினிமா. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினோம் என நினைக்கிறேன்.

எனக்கு தமிழ் அவ்வளவு பிடிக்கும். நம் சினிமா கோடம்பாக்கத்திலிருந்துதான் மற்ற மாநிலங்களுக்குச் சென்றது. இப்படத்தில் அந்தக்கால சினிமா ஸ்டூடியோ கலாசாரங்களையும் அதன் கதைகளையும் அழகாக பதிவு செய்திருக்கிறோம். அதை நீங்கள் ரசிப்பீர்கள்” என்றார்.

actor dulquer salmaan spokes about kaantha movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடல் கன்னி... வைஷ்ணவி!

நல்ல சாலைகளால்தான் அதிக விபத்துகள் - பாஜக எம்.பி. கருத்து

கொஞ்சம் காடு கொஞ்சம் அமைதி... சுமன் மோதி!

இந்த வார ஓடிடி படங்கள்!

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்தன எஸ்.ஐ.ஆரை ஆதரிக்கிறார்கள் - அன்பில் மகேஸ்

SCROLL FOR NEXT