நடிகர் சந்தானம் கிரைம் திரில்லர் கதையில் நடிக்க உள்ளார்.
நடிகர் சந்தானம் கதாநாயகனான பின் சில வெற்றிப்படங்களைக் கொடுத்தார். ஆனால், இறுதியாக நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியான தோல்வியைச் சந்தித்தது.
இந்த நிலையில், தற்போது கிரைம் திரில்லர் கதையில் நடிக்கவுள்ளார். அதற்காக, பிரபல நாவலாசிரியர் ராஜேஷ் குமாரைச் சந்தானம் சந்தித்துள்ளார்.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இதற்கிடையே, ஜெயிலர் - 2 திரைப்படத்திலும் சந்தானம் நடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா வா வாத்தியார்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.