நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய திரைப்பட இயக்குநர் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 173 ஆவது திரைப்படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், அடுத்த சில நாள்களிலேயே கனத்த இதயத்துடன் இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர் சி அறிவிப்பை வெளியிட்டார். திடீர் அதிர்ச்சியாக இது அமைந்தது.
இதனால், தலைவர் 173 திரைப்படத்தின் இயக்குநர் யார் என்கிற கேள்விகளும் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், பார்க்கிங் படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் நடிகர் ரஜினியிடம் கதை சொன்னதாகவும் அதன் மையக்கரு அவருக்குப் பிடித்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மகாராஜா திரைப்படம் மூலம் இந்தியளவில் பேசப்பட்ட இயக்குநர் நித்திலனும் ரஜினிக்கு கதை சொன்னதாகக் கூறப்படுகிறது. இருவரில் யார் ரஜினியுடன் இணைவார் என்பதை ரஜினியின் பிறந்த நாளான டிச. 12 அன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: மாஸ்க், மிடில் கிளாஸ் வசூல் எவ்வளவு?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.