ரஜினி - 173 திரைப்படத்தின் இயக்குநர் மீண்டும் மாற்றம்?
ரஜினி - 173 திரைப்படம் குறித்து....
நடிகர் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படத்திலிருந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் செல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், தன் 173வது திரைப்படமாக சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருந்தார்.
கூலி, ஜெயிலர் - 2 ஆகிய திரைப்படங்கள் ஆக்சன் படங்கள் என்பதால் அடுத்த திரைப்படத்திலாவது ஜனரஞ்சகமாக நடிக்க வேண்டும் என்பதற்காகவே இயக்குநர் சுந்தர். சி படத்தில் ஒப்பந்தமானார். ஆனால், சில காரணங்களால் சுந்தர். சி விலக, அப்படத்திற்கான இயக்குநராக சிபி சக்ரவர்த்தி ஒப்பந்தமானார்.
Advertisement
இதற்கான முதல்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தபோதே படத்தின் அறிவிப்பு விடியோவும் அதில் இடம்பெற்ற பின்னணி இசையும் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் இப்படத்திலிருந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தியை மாற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவருக்குப் பதிலாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து ரஜினி 173 படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்தடுத்து 2 இயக்குநர்கள் மாற்றப்பட்ட தகவல் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.