பிக் பாஸ்: போட்டியாளர்களை விடியோ மூலம் ஊக்கப்படுத்திய நண்பர்கள்!
பிக் பாஸ் போட்டியாளர்களை ஊக்கப்படுத்திய நண்பர்கள்...
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் விடியோ மூலம் தோன்றி போட்டியாளர்களை அவர்களின் நண்பர்களும் உறவினர்களும் ஊக்கப்படுத்தியுள்ளனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 50 நாள்களைக் கடந்துள்ளது. நேற்று நடைபெற்ற வார இறுதி நாள் நிகழ்வில், மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகளைப் பெற்ற கெமி, பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
நேற்றைய நிகழ்வு முடியும்போது, போட்டியின் தொகுப்பாளராக உள்ள விஜய் சேதுபதி, 50 நாள்கள் நிறைவு செய்துள்ள உங்கள் அனைவருக்கும் நாளை ஒரு சப்ரைஸ் இருப்பதாக தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் அவர்களின் விளையாட்டு குறித்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பேசும் விடியோ தனித்தனியாக திரையிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிரஜனுக்கு அவரது நண்பரான நடிகரும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் வெற்றியாளருமான ஆரி அறிவுரை வழங்கியுள்ளார். ஆரியின் விடியோவில், “நீ சொன்னதை எதுவும் செய்யவில்லை. இந்த நிகழ்ச்சியில் உனது அனுபவத்தைக் காட்டாமல் வாழ்க்கையில் எங்கு காட்டப் போகிறாய்.” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கனிக்கு அவரது சகோதரியும் நடிகையுமான விஜயலட்சுமி அகத்தியன், “மற்றவர்களை வெற்றிபெற வைக்க வந்த உதவி கதாபாத்திரமா நீ? இல்ல, வெற்றியாளராகும் நாயகியா நீ? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கமரூதினுக்கு அவரது நண்பரும் சின்னத்திரை நடிகருமான ஆரியன் அறிவுரை வழங்கியுள்ளார். அவர், “இந்த விளையாட்டைத் தனியாக விளையாடினால், பைனல் மேடையில் நிற்பதற்கான அனைத்து தகுதியும் உனக்கு இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
மற்ற போட்டியாளர்களுக்கும் அவரவர் உறவினர்களும், நண்பர்களும் போட்டியில் முன்னோக்கிச் செல்வதற்கான அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
Bigg Boss: Friends who encouraged the contestants through videos
இதையும் படிக்க : ஸ்மிருதி மந்தனாவின் மணமகனும் மருத்துவமனையில் அனுமதி!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.