கபடி வீரர் மனத்தி கணேசனுக்கு வழிகாட்டியாக இருந்த அவரது ஆசிரியரை இயக்குநர் மாரி செல்வராஜ் கௌரவப்படுத்தியுள்ளார்.
நடிகர் துருவ் - இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
மேலும், இப்படம் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதால் வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பைசன் கதையில் அர்ஜூனா விருது வென்ற கபடி வீரர் மனத்தி பி. கணேசனின் வாழ்க்கையும் இருப்பதால் அவருக்கு வழிகாட்டியாக இருந்த உடற்பயிற்சி ஆசிரியரை ஒரு கதாபாத்திரமாக திரைப்படத்தில் மாரி செல்வராஜ் காட்டியிருந்தார்.
சந்தனராஜ் என்கிற அக்கதாபாத்திரத்தில் நடிகர் அருவி மதன் நன்றாகவும் நடித்து கவனம் ஈர்த்தார்.
இந்த நிலையில், நிஜ ஆசிரியரான தங்கராஜை இயக்குநர் மாரி செல்வராஜ், மனத்தி கணேசனுடன் நேரில் சென்று மாலை அணிவித்து தன் மரியாதையைச் செலுத்தியுள்ளார். இவர்கள் சந்தித்துக்கொண்ட விடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: இதற்காக அப்பா என்னை அடித்தார்: துருவ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.