முகப்பு
செய்திகள்

மை லார்ட் என்னை நிறைய யோசிக்க வைத்தது: மாரி செல்வராஜ்

மை லார்ட் குறித்து மாரி செல்வராஜ்....

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 6:23 AM
மாரி செல்வராஜ்
பகிர்:

இயக்குநர் மாரி செல்வராஜ் மை லார்ட் திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர்கள் சசிகுமார், சைத்ரா ஆச்சார் நடிப்பில் உருவான மை லார்ட் திரைப்படம் பிப். 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதன் அறிமுக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் பாலா, மாரி செல்வராஜ், வெங்கடேஷ் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “மை லார்ட் திரைப்படத்தைப் பார்த்து முடித்ததும் என் உதவி இயக்குநர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை செய்தேன். இப்படத்தின் முடிவு என்னை நிறைய யோசிக்க வைத்ததுடன் தர்க்கப்பூர்வமாக அசைத்துப் பார்த்தது. கிளைமேக்ஸ் சரியா? இல்லை, தவறா? என இரவு முழுவதும் பேசினோம். இப்படி நினைத்துப் பாருங்கள் என ஒரு விஷயத்தைச் சொன்னேன்.

நடிகர் சசிகுமாரால் மட்டும்தான் இப்படியான படங்களில் நடிக்க முடியும். நல்ல கதையை எழுதுபவர்களிடம் எல்லாம் சசிகுமார் இருக்கிறார். தைரியமாக எழுதுங்கள் என்றுதான் சொல்வேன். அப்படியான ஓர் ஆள். ராஜுமுருகன் இப்படத்தில் வெற்றி பெற்றுவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

summary

director mari selvaraj spokes about my lord movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.