கூட்டுக் குடும்பம் அவசியமா? ஜீ தமிழில் புதிய தொடர், அண்ணாமலை குடும்பம்!
தெலுங்கு மொழியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற உம்மடி குடும்பம் என்ற தொடரின் மறுஉருவாக்கம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தைக் கூறும் வகையில் புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
தெலுங்கு மொழியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற உம்மடி குடும்பம் என்ற தொடரின் மறுஉருவாக்கமாக தமிழில் அண்ணாமலை குடும்பம் ஒளிபரப்பாகவுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சமீபகாலமாக புத்தம் புதிய மெகா தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. சமீபத்தில் பாரிஜாதம் போன்ற தொடர்கள் ஒளிபரப்பாகத் தொடங்கின. தற்போது அண்ணாமலை குடும்பம் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
Advertisement
Advertisement
இந்தத் தொடர் ஒளிபரப்பாகும் நாள், நேரம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகாத நிலையில், தொடரின் முன்னோட்ட விடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கூட்டுக் குடும்பமாக வசித்துவரும் அண்ணாமலை என்ற பெண் உறவுகள் சேர்ந்து வாழ்வதையே பலமாகக் கருதுகிறார். தொடக்க காலத்தில் மிகுந்த சிரமத்தை சந்தித்தாலும் தற்போது பொருளாதார ரீதியாக உயர்ந்துள்ளதால், அனைவரையும் அரவணைத்து வாழ வேண்டும் என நினைக்கிறார்.
இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இதேபோன்று மற்றொடு நடுத்தர வீடு கட்டப்படுகிறது. அது அம்மா, அப்பா, இரு மகள்கள் என வசித்துவரும் தனிக்குடுத்தனம். அதில், உள்ள இளைய மகளே நாயகி. அவர் ஒற்றுமையாக இருக்க நினைப்பவர். ஆனால், மூத்த மகள் அனைத்திலும் தான் வேறுபட்டு தனித்துத் தெரிய வேண்டும் என நினைப்பவர்.
இந்த இரு பெண்களும் அண்ணாமலை வீட்டில் உள்ள இரு மகன்களை திருமணம் செய்துகொண்டு சந்திக்கும் சவால்கள் நிகழ்வுகளே அண்ணாமலை குடும்பத்தின் கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற உம்மடி குடும்பம் என்ற தொடரின் மறுஉருவாக்கமாக அண்ணாமலை குடும்பம் உருவாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பிக் பாஸ் 9: ஒவ்வொரு புரோமோவிலும் பார்வதி! காரணம் என்ன?
Annamalai Kudumbam in zee tamil
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.