பிக் பாஸில் இந்த வாரம் பார்வதி மற்றும் கம்ருதின் ஆகியோரை சக போட்டியாளர்கள் சிறைக்கு அனுப்பியுள்ளனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. இதுவரை நந்தினி, பிரவீன் காந்தி மற்றும் அப்சரா ஆகியோர் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். 17 பேர் விளையாடி வருகின்றனர்.
இந்த வாரம் ’பிக் பாஸ் ஜூஸ் ஃபேக்டரி’ என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் பிரவீன் மற்றும் சுபிக்ஷா வெற்றி பெற்றனர்.
இந்த டாஸ்க்கில் தர சரிபார்ப்பாளர்களாக திவாகரும், பார்வதியும் செயல்பட்டனர். அப்போது வழக்கம்போல் பார்வதியும் சக போட்டியாளர்களும் முட்டிக்கொண்டனர்.
இதன் எதிரொலியாக இந்த வாரம் மோசமாக விளையாடிய போட்டியாளர்கள் பட்டியலுக்கு பெரும்பாலான போட்டியாளர்கள் பார்வதியின் பெயரை பரிந்துரைத்தனர். மற்றொரு போட்டியாளர்களாக கம்ருதினை தேர்வு செய்தனர்.
கம்ருதின் மற்றும் துஷாருக்கு இடையே இந்த வாரம் மோதல் ஏற்பட்டது. அப்போது துஷார் மேல் கை வைத்து தள்ளியது, வெளியே வந்தால் தலையைத் திருப்பிவிடுவேன் என்று மிரட்டல் விடுத்தது உள்ளிட்டவை கம்ருதினுக்கு எதிராக திரும்பியது.
இவர்கள் இருவரையும் சிறையில் அடைக்க பிக் பாஸ் உத்தரவிட்ட போது, கலையரசன் மற்றும் அரோரா மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் தொடங்கியதில் இருந்து பார்வதியின் நண்பர்கள் வட்டாரத்தில் கலையரசன் இருந்தார். ஆனால், தற்போது பார்வதிக்கு எதிராக அவர் திரும்பியுள்ளார்.
இதேபோல், கம்ருதினுடன் கடந்த வாரம் முழுவதும் நட்பாக பேசிவந்த அரோரா, தற்போது அவருக்கு எதிராகியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.