FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

2 பாகங்களாக உருவாகும் சிம்பு - வெற்றி மாறன் திரைப்படம்!

எஸ்டிஆர் - 49 குறித்து....

18 செப்டம்பர் 2025, 4:13 pm IST
பகிர்:

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை திரைப்படத்தின் காலகட்டத்தைத் தொட்டு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களமாக உருவாகி வருகிறது.

இதில் நாயகனாக நடிகர் சிலம்பரசனும் முக்கிய கதாபாத்திரங்களில் வடசென்னை திரைப்படத்தில் நடித்தவர்களும் நடிக்கின்றனர்.

Advertisement

Advertisement

அண்மையில், இப்படத்தின் புரோமோ பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது. சிம்பு நடந்து வருவது போன்ற காட்சி இப்படம் வடசென்னை திரைப்படத்தை மையப்படுத்தி உருவாகி வருவதை உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்திற்கான 1.15 மணி நேரக் கதையை எழுதி முடித்ததாகவும் மீதம் 5 எபிசோடுகள் அளவிற்கு கதை உள்ளதாகவும் இயக்குநர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.

இதனால், இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வடசென்னை திரைப்படத்தின் 2 ஆம் பாகத்திற்கு ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இந்த தகவலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

summary

silambarasan and vetri maaran movie could be a 2 Part film

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments