கரூர் பலி: மம்மூட்டி, மோகன்லால் இரங்கல்!
கரூர் நெரிசல் சம்பவத்துக்கு மம்மூட்டி, மோகன்லால் இரங்கல் தெரிவித்துள்ளனர்...
கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் நேற்று (செப். 27) இரவு கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மிக மோசமான நெரிசலில் 40 பேர் பலியானது மாநிலத்தையே உலுக்கியுள்ளது.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சமும் த.வெ.க. சார்பில் விஜய் ரூ. 20 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
அதேநேரம், இந்த கோர சம்பவத்துக்கு இந்தியளவிலுள்ள அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் இரங்கல்களைக் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர்கள் மம்மூட்டியும் மோகன்லாலும், “கரூரில் நடந்த சம்பவம் துன்பமளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடுபவர்களுக்கு இரங்கல்களைத் தெரிவிக்கிறோம்.” எனப் பதிவிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: விஜய்யைக் கைது செய்ய வேண்டும்: ஓவியா
actors mammooty and mohanlal convey their condolences for karur stampede
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.