ஜிகர்தண்டா - 3 திட்டத்தில் கார்த்திக் சுப்புராஜ்!
ஜிகர்தண்டா - 3 படம் குறித்து...
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா - 3 திரைப்படத்திற்கான திட்டத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழில் ஸ்டைலான மேக்கிங் திறன் கொண்ட இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ். ஜிகிர் தண்டா, மகான், ஜகமே தந்திரம், ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய திரைப்படங்களில் உருவாக்க ரீதியாகவும் கவர்ந்தார்.
இறுதியாக, இவர் இயக்கத்தில் வெளியான ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால், சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜை ரசிகர்கள் விமர்சித்தனர்.
Advertisement
தொடர்ந்து, புதுமுக நடிகர்களை வைத்து சுயாதீன படமொன்றை இயக்கி முடித்துள்ளார். இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டு பின் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “ஜிகர்தண்டா - 3 திரைப்படத்திற்கான திட்டம் இருக்கிறது. அதற்கான கதைக்கருவும் இருப்பதால் கண்டிப்பாக எடுப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படங்களிலேயே ஜிகர்தண்டாவுக்கு இந்தியளவில் கவனம் கிடைத்தது. காரணம், பல இயக்குநர்களே இப்படத்தைப் பாராட்டியுள்ளனர். ஆவேஷம் திரைப்படத்தை இயக்கிய ஜித்து மாதவன், நகைச்சுவையுடன் கூடிய கேங்ஸ்டர் திரைப்படங்களில் ”ஜிகர்தண்டா” ஒரு பென்ஞ் மார்க் சினிமா. அதனுடைய தாக்கம் இல்லாமல் அந்த வகையில் படத்தை எடுக்க முடியாது எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.