போலீஸ், வழக்குரைஞர், தொழிலதிபர் வித்தியாசமான கதைகளில் சூர்யா!
நடிகர் சூர்யாவின் கதைத் தேர்வுகள் குறித்து...
நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள திரைப்படங்களின் கதாபாத்திரங்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளன.
தமிழ் என்றில்லாமல் தென்னிந்திய அளவில் மிக நல்ல நடிகராகவும் பெரும்பான்மையான ரசிகர்களுக்கும் பிடிக்கும் நாயகனாகவே சூர்யா இருக்கிறார்.
தோல்விப்படங்கள் அமைந்தாலும் அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுப்பதும் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெறும் இயக்குநர்களுடன் பணியாற்றுவதையும் சூர்யா வழக்கமாக வைத்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்தாண்டு மட்டும் சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து 3 திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
இதில், ஆர்ஜே பாலாஜி இயக்கிய கருப்பு திரைப்படத்தில் வழக்குரைஞராகவும் இயக்குநர் வெங்கட் அட்லுரியின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் தொழிலதிபராகவும் நடித்துள்ளார். மேலும், மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கிவரும் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்தும் வருகிறார்.
ரெட்ரோ கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வித்தியாசமான கதைக்களத்துடன் கூடிய கதாபாத்திரங்களில் சூர்யா தொடர்ந்து நடித்து வருவது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.