செய்திகள்

ஒரே நாளில் வெளியாகும் டாக்ஸிக், துரந்தர்!

டாக்ஸிக், துரந்தர் வெளியீடு குறித்து....

இணையதளச் செய்திப் பிரிவு

ஒரே நாளில் இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்கள் திரைக்கு வருகிறது.

பான் இந்தியத் திரைப்படங்கள் அதிகரித்து வரும் சூழலில் இந்திய வணிகைகளை மட்டுமல்லாது உலகளவில் கவனம் பெற, ஆக்சன்களுடன் கூடிய திரைக்கதைகள் அதிகரித்து வருகின்றன.

அப்படி, கேஜிஎஃப் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் யஷ் அதிக பட்ஜெட்டில் உருவாகும் டாக்ஸிக்கில் நடித்து முடித்துள்ளார். கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் டீசர் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

இதேபோல், ஹிந்தியில் மட்டுமே உருவானாலும் இந்தியளவில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்ததுடன் ரூ. 1300 கோடி வரை வசூலித்து மிரட்டியது துரந்தர். நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான இப்படம் ஓடிடியில் வெளியாகியும் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றது. இதன், இரண்டாம் பாகம் பான் இந்திய வெளியீடாக உருவாகி வருகிறது.

இந்த நிலையில், டாக்ஸிக் மற்றும் துரந்தர் - 2 ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் (மார்ச் 19) திரையரங்குகளில் வெளியாகவுள்ளன.

இரண்டு திரைப்படங்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் ஏதேனும் ஒரு திரைப்படம் வெளியீட்டை மாற்றவும் வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.

dhurandhar and toxic movie will release same date

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த இபிஎஸ்!

நீதிக் கதைகள்! கரடி சொன்ன ரகசியம்!

மணிப்பூரில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் கெமசந்த் சிங்!

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 120 மூத்த நிர்வாகப் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

யு19 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் நிதானமான பேட்டிங்!

SCROLL FOR NEXT