கராத்தே பாபு படப்பிடிப்பு நிறைவு!
கராத்தே பாபு படப்பிடிப்பு குறித்து...
கராத்தே பாபு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் டாடா திரைப்படத்தின் இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடித்த கராத்தே பாபு அரசியல் பின்னணியைக் கொண்ட கதையாக உருவாகியுள்ளது.
அண்மையில், இதன் டீசர் வெளியாகி எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியதுடன் ரவி மோகனின் கதாபாத்திர தோற்றம் வரவேற்பையும் பெற்றது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தை தேர்தலுக்கு முன் திரைக்குக் கொண்டு வரத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதால் கோடை வெளியீடாகத் திரைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கராத்தே பாபுவின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.