கராத்தே பாபு என்ன ஆனது?
கராத்தே பாபு படம் குறித்து...
கராத்தே பாபு திரைப்படத்தின் வெளியீடு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் டாடா திரைப்படத்தின் இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடித்த கராத்தே பாபு அரசியல் பின்னணியைக் கொண்ட கதையாக உருவாகியுள்ளது.
இதன் டீசர் வெளியாகி எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியதுடன் ரவி மோகனின் கதாபாத்திர தோற்றம் வரவேற்பையும் பெற்றது.
Advertisement
Advertisement
இப்படத்தைத் தேர்தலுக்கு முன் திரைக்குக் கொண்டு வரத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் வெளியாகவில்லை.
சில நாள்களுக்கு முன் தன் விவாகரத்து முடிவு குறித்து பேசிய நடிகர் ரவி மோகன், இந்த பிரச்னை முடியும் வரை தன்னால் சினிமாவில் நடிக்க முடியாது என கூறியிருந்தார்.
இந்த நிலையில், கராத்தே பாபு என்ன ஆனது? வெளியாகுமா? எனக் கேள்விகள் எழுந்துள்ளன. தவெக தலைவர் விஜய் முதல்வரான பின் அரசியல் குறித்து சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வரும் சூழலில் இப்போது கராத்தே பாபு வந்தால் வரவேற்பு கிடைக்கும் என்றும் ரசிகர்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.