கருப்பு வெளியீட்டுக்குத் தயார்: ஆர்ஜே பாலாஜி
கருப்பு திரைப்படம் குறித்து ஆர்ஜே பாலாஜி....
கருப்பு திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளதாக ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கருப்பு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தும் இன்னும் வெளியீடு காணாமல் இருக்கிறது.
காரணமாக, இன்னும் இப்படத்தின் ஓடிடி உரிமம் விற்கப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகின. கருப்பு திரைப்படத்தை ஏப்ரல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படம் குறித்து ஆர்ஜே பாலாஜி பேசியுள்ளார். அதில், “கருப்பு திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. தேர்தல் முடிந்ததும் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். படம் நன்றாக வந்திருக்கிறது. அனைவருக்குமான திரைப்படமாகவே இது உருவாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.