‘போர் தொழில்’ விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷின் புதிய படம் பெயர் அறிவிப்பு!
‘போர் தொழில்’ விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷின் புதிய படம் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
'போர் தொழில்' இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 54-வது படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் வரை சென்ற நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்தாண்டில் மட்டும் மூன்று படங்கள் வெளியாகியிருந்தன.
தெலுங்கில் குபேரா, அடுத்ததாக தமிழில் தன்னுடைய இயக்கத்தில் இட்லி கடை, ஹிந்தியில் தேரே இஷ்க் மெய்ன் என மூன்று படங்களுமே அந்தந்த மொழிகளில் வெற்றிபெற்றன. இதுமட்டுமின்றி, அவரின் இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்கிற திரைப்படமும் வெளியாகி கலவையான விமர்சனங்களை ப் பெற்றது.
Advertisement
Advertisement
அசோக் செல்வன் நடிப்பில் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற போர்த்தொழில் படத்தில் இயக்குநர் விக்னேஷ் ராஜாவுடன் தன்னுடைய 54 வது படத்தில் தனுஷ் ஒப்பந்தமானார்.
விக்னேஷ் ராஜா, தனுஷ் உடன் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், டி54 படத்தின் பர்ஸ்ட் முதல் பார்வை போஸ்டருடன் படத்தின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ‘கர’ என பெயரிடப்பட்டு உள்ளது.
போஸ்டரில், “சில நேரங்களில் ஆபத்தாக இருப்பதே உயிருடன் இருப்பதற்கான ஒரே வழி” என்ற கேப்சனும் இடம்பெற்றுள்ளது. இந்தப் படம் கோடையில் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் ஆண்டுகளில் உள்ள 60 ஆண்டு பெயர்களில் 25 ஆம் ஆண்டு கர என்று அழைக்கப்படுகிறது. அதனடிப்படையில் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Dhanush and director Vignesh Raja are currently working on their upcoming film, which was tentatively titled D54. The makers have now officially announced that the film is titled Kara.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.