முகப்பு
செய்திகள்

ஈரான் தாக்குதல்: துபையில் அஜித் நிலைமை என்ன?

போர் பதற்றத்துக்கு இடையே துபையிலுள்ள அஜித் குறித்து...

Updated On : 1 மார்ச், 2026 at 8:37 AM
அஜித் குமார்
பகிர்:

துபையில் நடக்கும் போர் தாக்குதல் குறித்து அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான ராணுவ தாக்குதல்கள் தொடங்கியதையடுத்து உலகம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, வளைகுடா நாடுகள் தாக்குதலுக்கு ஆளாகலாம் என்பதால் பல விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

முக்கியமாக, ஈரான் ராணுவம் துபையிலுள்ள அமெரிக்க ஆதரவு நிறுவனங்களைத் தாக்கி வருகிறது. அதேநேரம், ஐக்கிய அமீரகம் ஈரானின் தாக்குதல்களைச் சமாளிக்கும் வகையில் தாக்குதல் ஏவுகணைகளை வானிலேயே அழித்தும் வருகின்றன.

இதற்கிடையே, துபையிலுள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக இருக்கச் சொல்லியும் விரைவில் அவர்களை தாயகம் அழைத்தும் வரும் முயற்சிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், துபையில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள நடிகர் அஜித் குமார் அங்கு சில மாதங்களாக தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

துபையில் போர் பதற்றம் காரணமாக, அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் கவலையடைந்த நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, “நடிகர் அஜித்குமார் பாதுகாப்பான இடத்தில் நலமாக உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

summary

actor ajith kumar safe and secure in dubai said by his manager suresh chandra

முழு கட்டுரையைப் படிக்க →