பெரம்பூர் கானா... அன்பே டயானா படத்தின் முதல் பாடல் வெளியீடு!
அன்பே டயானா படத்தின் முதல் பாடல் வெளியீடு...
அன்பே டயானா திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது.
ஜமா திரைப்படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநராகவும் நடிகராகவும் கவனம் பெற்றவர் பாரி இளவழகன். அந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து அவர் இயக்கி நடித்துள்ள புதிய திரைப்பட, ’அன்பே டயானா’.
லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
நாயகியாக ரம்யா ரங்கநாதன்நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் சேத்தன், ரோஜா, பரிதாபங்கள் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் நடக்கும் காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் சில நாள்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது, இப்படத்தின் முதல் பாடலான ‘பெரம்பூர் கானா’ வெளியாகியுள்ளது. ஜாஸ்ஸி கிஃப்ட் பாடிய இப்பாடலை மோகன் ராஜன், பாக்கியம் சங்கர், முத்தமிழ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.
இப்படம் கோடை வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகின்றது.