வாகா, வீரசிவாஜி ஆகிய படங்களைத் தொடர்ந்து விக்ரம்பிரபு நடித்து வரும் படம் "பக்கா'. சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், சிங்கம்புலி, மனோபாலா, சிங்கமுத்து, மயில்சாமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் எஸ்.எஸ்.சூர்யா. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்த நிலையில், விக்ரம் பிரபு ஜோடியாக நடிப்பதற்கு கதாநாயகி தேர்வு நடைபெற்று வந்தது. இக்கதைக்கு இரு கதாநாயகிகள் தேவை என்பதால், இந்த தேர்வில் இழுபறி நீடித்து வந்தது. பலரின் பெயர் பரிசீலனையில் இருந்த நிலையில், தற்போது நிக்கி கல்ராணி, பிந்துமாதவி இருவரும் அந்த வேடங்களுக்குத் தேர்வாகியுள்ளனர். பென் கண்ஸ்டோரிடியம் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. சரவணன் ஒளிப்பதிவு இயக்குநராக பணியாற்றுகிறார். சத்யா இசையமைக்கிறார். யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். கலை இயக்குநராக கதிர் பணியாற்றுகிறார். படத்தொகுப்பாளராக சசி பணியாற்றுகிறார். ஜூன் மாதம் படம் திரைக்கு வருகிறது.