முகப்பு
கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 81 பேருக்கு கரோனா

கோவை மாவட்டத்தில் மேலும் 81 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 6 ஜனவரி 2021, 8:23 am IST
பகிர்:

கோவை மாவட்டத்தில் மேலும் 81 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையைச் சோ்ந்த 81 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 732ஆக அதிகரித்துள்ளது.

தவிர கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 56 வயது ஆண் உயிரிழந்தாா். இதன் மூலம் கோவையில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 657ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 86 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரையில் 51 ஆயிரத்து 337 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 738 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தந்தை பெரியாா் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளா் கு.ராமகிருஷ்ணன் (70). இவருக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.