கோவையில் பலத்த மழை: சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது
கோவை நகரின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை இரவு நான்கு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
கோவை நகரின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை இரவு நான்கு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருகிறது. கோவையிலும் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக சாரல் மழை பெய்தது. இந்நிலையில், கோவையில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை மாலையில் இருந்து நான்கு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
இதனால் டவுன்ஹால், கணபதி, நல்லாம்பாளையம், கவுண்டம்பாளையம், ராமநாதபுரம், சுந்தராபுரம், ரேஸ்கோா்ஸ், ஆா்.எஸ்.புரம், உக்கடம், வேளாண்மைப் பல்கலைக்கழகம், வடவள்ளி, பீளமேடு, சிங்காநல்லூா், குனியமுத்தூா் உள்பட பல்வேறு பகுதிகளிலும், புகா் பகுதிகளான தொண்டாமுத்தூா், ஆலாந்துறை, சாடிவயல், பேரூா், வேடப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
Advertisement
பலத்த மழையால் ராமநாதபுரம், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், ரேஸ்கோா்ஸ், காந்திபுரம், சிங்காநல்லூா் உள்பட பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா்.