பதற்றமாக இருந்தேன்; சதம் விளாசிய பிறகு விராட் கோலி பேசியதென்ன?
தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆனதால் பதற்றமாக இருந்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆனதால் பதற்றமாக இருந்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ராய்பூரில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ஆர்சிபி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் விளாசி அசத்தியதுடன் அணியின் வெற்றிக்கும் உதவினார். அதிரடியாக விளையாடிய அவர் 60 பந்துகளில் 105 ரன்கள் (11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். சதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவிய விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
Advertisement
இந்த நிலையில், தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆனதால் பதற்றமாக இருந்ததாக விராட் கோலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த இரண்டு போட்டிகளாக நான் ரன்கள் எடுக்கவில்லை. அதன் காரணமாக நன்றாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சதம் விளாசியவுடன் பெரிய அளவில் என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை. ஏனெனில், இந்த வெற்றியின் மூலம் கிடைத்த இரண்டு புள்ளிகள் எவ்வளவு முக்கியம் என்பது எங்களுக்குத் தெரியும்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றி பெற்றுத் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். நல்ல அழுத்தம் வீரர் ஒருவரின் ஆட்டத்தை மேம்படுத்தும். கடந்த இரண்டு போட்டிகளாக ரன்கள் எடுக்காததால் பதற்றமாக இருந்தேன். அந்த அழுத்தம் அணிக்கு வெற்றி பெற்றுத் தரும் சிறப்பான இன்னிங்ஸை விளையாட உதவியது என்றார்.