ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் சாதனை; விராட் கோலிக்கு க்ருணால் பாண்டியா புகழாரம்!
ஐபிஎல் வரலாற்றில் 9000 ரன்கள் குவித்துள்ள முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ள விராட் கோலிக்கு க்ருணால் பாண்டியா புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் 9000 ரன்கள் குவித்துள்ள முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ள விராட் கோலிக்கு க்ருணால் பாண்டியா புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி பெற்றது.
நேற்றையப் போட்டியில் விராட் கோலி 15 பந்துகளில் 23* ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். நேற்றையப் போட்டியில் 23 ரன்கள் எடுத்தன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 9000 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி.
Advertisement
இந்த நிலையில், தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுவது மற்றும் ரன்கள் குவிக்க வேண்டும் என்ற விராட் கோலியின் வேட்கை நம்பமுடியாத விதத்தில் இருப்பதாக ஆர்சிபி ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி மிகவும் சிறந்த வீரர். கடந்த 15-20 ஆண்டுகளில் அவர் படைத்துள்ள சாதனைகள் நம்பமுடியாத அளவுக்கு உள்ளது. அவர் மிகவும் சிறப்பாக தொடர்ச்சியாக ரன்கள் குவிக்கிறார். உடற்தகுதி வீரர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை உணர்த்தும் விதமாக அவர் உடற்தகுதியை சரியாக வைத்துள்ளார்.
விராட் கோலி அவரது கிரிக்கெட் பயணத்தில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் 9000 ரன்கள் குவித்தது தொடர்பாக நான் அவரிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால், அவர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி போட்டிகளை வென்று கொடுப்பார் என நம்புகிறேன் என்றார்.
ஐபிஎல் தொடரில் இதுவரை 275 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 9012 ரன்கள் குவித்துள்ளார். அதில் 8 சதங்கள் மற்றும் 66 அரைசதங்கள் அடங்கும். அவரது சராசரி 40.05 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 133.05 ஆகவும் உள்ளது. அவரது அதிகபட்ச ஸ்கோர் 113*.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 351 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.