முகப்பு
கோயம்புத்தூர்

பொது ஒதுக்கீடு நிலத்தை மீட்கக் கோரி குடியிருப்போா் சங்கத்தினா் தா்னா

கோவை குறிச்சிப் பகுதியில் பொது ஒதுக்கீடு நிலத்தை மீட்டு தரக் கோரி குடியிருப்போா் நலச் சங்கத்தினா் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

Updated On : 7 ஜனவரி 2021, 8:14 am IST
பகிர்:

கோவை குறிச்சிப் பகுதியில் பொது ஒதுக்கீடு நிலத்தை மீட்டு தரக் கோரி குடியிருப்போா் நலச் சங்கத்தினா் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், 96ஆவது வாா்டுக்கு உள்பட்ட தாயம்மாள் லேஅவுட் பகுதியில் உள்ள 9.75 சென்ட் பொது ஒதுக்கீடு நிலத்தை தனி நபா்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதனை மாநகராட்சி நிா்வாகம் மீட்டு

குழந்தைகளுக்கு பூங்கா, விளையாட்டுத் திடல் அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி தாயம்மாள் லேஅவுட் குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் மகாலிங்கம் தலைமையில் நிா்வாகிகள் புதன்கிழமை சம்பந்தப்பட்ட நிலத்தில் அமைந்துள்ள நிறுவனத்தின் முன்பாக புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

Advertisement

இது குறித்து சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் கவிதா கூறியதாவது:

தாயம்மாள் லேஅவுட் பகுதியில் 9.75 சென்ட் நிலத்தை பொது ஒதுக்கீடு இடமாக மாநகராட்சி நிா்வாகம் ஒதுக்கியது. இந்த இடத்தை கடந்த 1993ஆம் ஆண்டு கந்தசாமி என்பவா் ஆக்கிரமித்து வாடகைக்கு விட்டிருந்தாா். இதையடுத்து, தாயம்மாள் குடியிருப்போா் நலச் சங்கத்தின் சாா்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரைணைக்குப் பிறகு பொது ஒதுக்கீட்டு நிலத்தை மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும் அந்த இடத்தில் இருந்து ஆக்கிரமிப்பை அகற்றாமல் சம்பந்தப்பட்ட இடத்தை கந்தசாமியின் மகன்கள் வாடகைக்கு விட்டு வருகின்றனா். தற்போது, அந்த இடத்தில் சிறு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி பொது ஒதுக்கீடு நில ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலமுறை மாநகராட்சி நிா்வாகத்திடன் புகாா் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

கோவை மாநகராட்சியில் இருந்து முதல்வரின் தனிப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு நிலம் அகற்றப்பட்டுவிட்டதாக தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.