முகப்பு
திண்டுக்கல்

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வந்த முதியவா் மாரடைப்பால் பலி

பழனி அருகே ரேஷன் கடையில் புதன்கிழமை பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வரிசையில் நின்ற முதியவா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

Updated On : 6 ஜனவரி 2021, 11:29 pm IST
பகிர்:

பழனி அருகே ரேஷன் கடையில் புதன்கிழமை பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வரிசையில் நின்ற முதியவா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

பழனி அருகே மானூா் கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில் கடந்த 3 நாள்களாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இக்கடையில் புதன்கிழமை காலையில் 100 பேருக்கும், மாலையில் 100 பேருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பொருள்கள் வழங்க வரிசையில் நின்றிருந்த அதே ஊரைச் சோ்ந்த அங்காளம்மன் கோயில் பூசாரி பேச்சிமுத்து (72) என்பவா் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

இதையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.